Home > Work > விஷ்ணுபுரம்
1 " அகங்காரமிருந்தால் வாழ்க்கையின் அடிகள் ரொம்ப வலிக்கும். "
― ஜெயமோகன் [Jeyamohan] , விஷ்ணுபுரம்
2 " மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது. "
3 " காண்பதும், நூல்களிலிருந்து புரிந்துகொள்ளப்படுவதும் ஆன விஷயங்களில் விருப்பமற்றுப்போகும் வசீகரம் என்ற மேன்மையான போதமே வைராக்யம் என்பது’ பதஞ்சலி யோகசூத்திரம் "
4 " காடு... மனித சஞ்சாரமில்லாதிருப்பதன் சுதந்திரத்தை தாவரங்கள் கொண்டாடுகின்றன. "
5 " யானையின் உடலில் மனிதர்கள் உருவாக்கிய வீட்டுமிருகம். மணியோசையின் தருக்கத்தால் அழுத்தப்பட்ட அசைவுகள் அதனுடையவை. அதில் தெரிந்த அழகுகள் யானையின் அழகுகளல்ல, மனித அழகுகள் அவை. "
6 " புழுதியே அனைத்தையும் உண்ணும் பெரும்பசி கொண்ட மகாபிருத்வியின் சிறகு என்பார் தாத்தா. "
7 " பிம்பங்கள் குமுறிக் கொப்பளிக்கும் இருண்ட ஆழம் ஒன்று. அதன் ஒவ்வோர் அலைக்குப் பின்பும், இடைவெளியின் நொடியில் அது தோன்றி மறைகிறது.” “அந்த ஆழமே ஸ்வப்பனம். அதில் உன்னை ஆழத்திக்கொண்டால் அடித்தரை வெளியாகத் திறக்கும். அதன் பெயர் சுஷûப்தி "
8 " உண்மையான வாழ்வின் ஈரமற்ற தீவிரத்தைத் தாங்கமுடியாமல் நான் தப்பித்து ஒளியும் குகைகளா இந்த இறந்தகாலங்கள்? "
9 " வீட்டுப் பசுக்களுக்கு மரணமில்லை. குட்டிகளை அவை தங்களிடத்தில் நிறுத்திவிடுகின்றன. தொழுவில் மாறாத இளமையுடன், ஒரே பசு தலைமுறைகள்தோறும் நின்றபடி இருக்கிறது. "
10 " கண்மணிகள் மனமெனும் பட்டத்திலகட்டப்பட்ட நூல்கள். கண்மணிகள் அசையாத நிலையே மனம் அமைதியடையும் நிலை. "
11 " ஆனால் அடியில் சொற்களற்ற ஒரு மவுனம் அவற்றை உற்றுக் கவனிக்கிறதே, அது என்ன? "
12 " எண்ணங்களினாலானது மனம் என்றால் எண்ணங்களை எப்படிப் பார்க்க முடிகிறது? "
13 " காளிதாச காவியத்திலே சர்க்கத்துக்கு ஒரு தேவதை கட்டுண்டு இருப்பதாகக் கூறுவார்கள். முதல் வாசிப்புக்கு நமக்கு அதன் பொருள் மட்டுமே தெரியும். மீண்டும் வாசித்தால் லயம் கூடிவிடும். தேவதை சன்னதமாகும். பித்துப் பிடித்தது போல அந்த சர்க்கத்தையே படிப்போம். "
14 " காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகுதான் மனிதன் கலைகளையும் இலக்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமிமீது பெண்ணே இல்லை என்பார். பெண் அறிமுகமாவதற்கு முன்பே ஆயிரம் வருடங்களாக மனம் பெண் பற்றி உருவாக்கிய கனவுகள் அறிமுகமாகி விடுகின்றன. "
15 " சங்கீதம் எப்போதும் பூரணத்திற்கு ஒரு மாத்திரை குறைவாகத்தான் இருக்க வேண்டும். நாதம் முழுமை பெற்றால் அதற்குரிய யட்சி கண்விழித்து விடும். "
16 " யோகம் மனதை அஞ்சுவதை நிறுத்து என்கிறது. செயல்களிலிருந்து துண்டித்துக்கொள் என்கிறது. நீ ஓடுவது நின்ற உடனே மனமும் நின்று விடும். அதன் பிறகு அது எண்ண அலைகளாக இருக்காது. "
17 " நமது ஞானம் எங்கோ முளைத்து மரங்களாகிய காடாகிறது. நாம் விதைக்கும் விஷயங்கள் மட்கிவிடுகின்றன. தவறுதலாக உதிர்ந்தவை பிற்பாடு பெரும் விருட்சமாகக் காட்சிதருகின்றன. "
18 " ஏனெனில், நீ உன் மனதைக் கூர்ந்து பார்க்கும்போது மனம் மனதைப் பார்க்கிறது. மனம் இரண்டாகப் பிளந்துவிடுகிறது. பரஸ்பரம் விழுங்கும் பாம்புகள் போல. ஒன்றின் நோக்கங்களுக்கு ஏற்ப பிறிது காட்சிதரும். யோகம் மனதை நோக்கங்களிலிருந்து விடுவிக்கிறது. "
19 " தியானம் என்பது இருபது விதமான சத்காய திருஷ்டிகளை நீக்கி மனம் முழுமையடைவது. "
20 " புலி பற்றிய ஞானமே புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கும் வழி. "