Home > Work > விஷ்ணுபுரம்
21 " பேச்சு நான்கு வகை என்று சாஸ்திரம். பிரம்ம வடிவமான ‘பரா‘வை ரிஷிகள் நாதப்பிரம்மம் என்கிறார்கள். பின்பு தொடக்கம், நடு, முடிவு இல்லாத பிரவாகமான ‘பஸ்யந்தி’. அதிலிருந்து எண்ணங்களாக மனதில் ஓடும் ‘மத்யமம்’. அந்த நதியிலிருந்து நாவும் தொண்டையும் மொண்டு எடுக்கும் ‘வைகரி’. "
― ஜெயமோகன் [Jeyamohan] , விஷ்ணுபுரம்
22 " மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவக் கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும், அவை மாறி மாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின்மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான். "
23 " மத்யமத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் வைகரியின் எடை, ஆயிரம் மடங்கு அழுத்தம். பஸ்யந்தியோ ஆயிரம் மத்யமத்திற்குச் சமம். அங்கே கீழே... "