Home > Work > வெள்ளையானை
1 " பஞ்சத்தைப் பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சவாலே இதுதான். அது ஒரு பிரமாண்டமான சாத்தான். உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும். பெரும் தீயைப் பார்த்திருப்பீர்கள். தீ உங்களை இழுப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ‘வா வா’ என்று அது அழைக்கும். கொஞ்சநேரம் தீயை உற்றுப்பார்த்தால் நீங்கள் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். "
― ஜெயமோகன் [Jeyamohan] , வெள்ளையானை
2 " ஆங்கில ஆட்சிதான் சென்னையில் நீடித்தது என்றாலும் நீதிக்கட்சியினர் தலித்மக்களைப் பெரும்பாலும் சென்னையின் மையத்தில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றார்கள். புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லிம்களைக் குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. இன்று அது ஒரு முஸ்லிம் குடியிருப்பு. "
3 " மனம் மிக எளிதில் பின்னால் ஒதுக்கிவிட்டிருந்ததை அவன் உணர்ந்தான். மனம் எந்த வேசியைவிடவும் தளுக்கு கொண்டது. எந்த மேடை மாந்த்ரீகனைவிடவும் கைஜாலம் கொண்டது. மேலே மேலே எண்ணங்களைப் போட்டு அதிலிருந்து நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. "
4 " அயர்லாந்துக்காகப் பலியாகும் புரட்சியாளனும் அவனைக் கொல்லும் பிரிட்டனின் படைவீரனும் ஒரே மனநிலையில் ஒருவரோடொருவர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி பேதமில்லாமல் சுட்டுத்தள்ளுகிறது. மண் பேதமில்லாமல் உள்ளே வாங்கிச் செரித்துக்கொள்கிறது. "
5 " மரிஸா “ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களை வெறுக்கிறார்கள்” என்றாள். “உண்மைதான். மக்களை மனமார வெறுக்காமல் ஒருவன் அவர்களை ஆட்சிசெய்ய முடியாது. "
6 " இந்த தேசத்தின் அதிகாரத்தை இங்குள்ள போர்ச் சாதிகளும், நிலவுடைமைச்சாதிகளும், வணிகச் சாதிகளும் பகிர்ந்து வைத்திருக்கிறார்கள். "
7 " இந்த தேசத்தின் எழுதப்படாத நியதிகளில் ஒன்று அது. செல்வமும் பதவியும் வரும்போது ஒவ்வொரு தாழ்ந்த சாதிக்காரனும் தன்னைத் தன் சாதியில் இருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டாக வேண்டும். "