Home > Author > Su. Venkatesan
61 " வாழ்வு எந்தக் கணத்திலும் முடிந்துவிடும். ஆனால், அறத்தின் அழிவுக்கான காரணம் நமது வாழ்வின் மீது படியுமேயானால் அதைவிட இழிவு வேறில்லை. "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி (வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி)
62 " முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் `போர்’ என்ற பெயரில் அதை நடத்திக்கொண்டிருக்கிறான். இரக்கமற்ற அந்தக் காட்சிகளைப் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போலக் கொடுமையானது வேறில்லை. கண்களைத் திறப்பதை விடக் கடினமானது மூடுவது. மனத்துக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கொண்டு அப்புறப்படுத்த முடியும்? "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி (வீரயுக நாயகன் வேள்பாரி)
63 " கண்களைத் திறப்பதைவிடக் கடினமானது மூடுவது. மனதுக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கோண்டு அப்புறப்படுத்த முடியும்? "
64 " ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது. "
65 " உறக்கம், விழிப்பு, ஆயுதமேந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தான். "
66 " ஆனால் கல் வெறும் கல்லாகவே இருக்கிறது. பறவையின் எச்சத்தில் முளைவிடும் தாவரத்தின் வேர்கள் மட்டுமே அதை உணருகிற ஆற்றல் பெற்றவை. அதனால்தான் விதையிலிருந்து முளைவிடும் முதல் தருணத்திலேயே அது பாறையை வென்றுவிடுகிறது. பதினெட்டு பவுண்டு பீரங்கியின் வாயிலிருந்து பறந்து வந்து அடித்த கல்குண்டுகளைத் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கற்பாறங்களின் ஊடே இடி மின்னலைப் போல் இறங்குகிறது ஒரு சிறு வேர். "
― Su. Venkatesan , காவல் கோட்டம்