Home > Author > Su. Venkatesan
1 " கடல் பயணத்தில் வலிமையை ஒப்பிட வேண்டியது பிற கடலோடிகளோடு அல்ல, எழும் அலைகளுடனும் வீசும் காற்றுடனும் இழுத்துச் செல்லும் நீரோட்டங்களுடனும்தான். "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி (வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி)
2 " பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும். "
3 " ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதை பொருத்துதான் மனிதமனம் எப்படி அதை எடுத்துக் கொள்கிறது என்பது தெரியவருகிறது. "
4 " ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது. "
5 " காட்டுக்குள் பிறவற்றிலிருந்து தப்பித்தலைப்போல, பிறருக்குத் தன்னை காட்டிக்கொள்வதும் சம முக்கியத்தும் உள்ள கலைதான். ஒவ்வொரு உயிரினமும் இந்த இரண்டு வித்தைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. "
6 " யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர். "
7 " எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்கமுடியாது. ஓளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்! "
8 " உங்களுக்குத் தேவையானதையும் அவர்களுக்குத் தேவையானதையும் பரிமாற்றிக் கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக்கொடுத்தவை. "
9 " எது சரி, எது தவறு, என்று ஏன் வரையறுக்க நினைக்கிறீர்கள்? காலத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது. தட்டின் மீது உட்கார்ந்துகொண்டு தராசை எப்படி எடைபோடுவீர்கள்? "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி (வீரயுக நாயகன் வேள்பாரி)
10 " நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்புக் கொண்டும் எரிக்கமுடியாதது கதை. "
11 " அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண் கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண் கொண்டு பார்த்தேன். "
12 " எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் எங்கிருந்து பார்க்கிறோம் என்பது தானே முக்கியம். கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது. "
13 " பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன. "
14 " அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது. ஏனென்றால் அது இயற்கைக்கு எதிரானது. விதையை நாடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும். "
15 " பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை."நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்."கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்."காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை. கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை. "
16 " போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது. அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது. "
17 " நம்பிய பிறகு ஒருவனைச் சந்தேகப்படுவது எளிது அல்ல "
18 " ஓடும் நீருக்குள் உறங்கும் நதி” என்று மனதுக்குள் ஒரு வரி தோன்றியது. அதுதான் பெண் எனவும் தோன்றியது "
19 " கதைகள்தான் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை கதையன்றி வேறு யார் கொடுப்பது? "
20 " கபிலர்: "அச்சம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், அஞ்சமாட்டேன் எனச் சொல்ல பொய் தேவையில்லை."பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன். "