Home > Author > Su. Venkatesan
21 " அரசர்கள் நாட்டை ஆள்கிறார்கள், வணிகர்கள் அரசர்களை ஆள்கிறார்கள் "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி (வீரயுக நாயகன் வேள்பாரி)
22 " எழுதக் கற்கும் வரை சொற்களின் வழியாக உலகைப் பார்த்துப் பழகியவர்கள், எழுதக் கற்ற பின்தான் உலகை விழுங்கி நகரும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு என்பதை உணர்வார்கள். "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி (வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி)
23 " இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்திற்கு உண்டு. "
24 " சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது. "
25 " விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப் போவதில்லை. விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றிநிற்பவை. "
26 " காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லா கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன. "
27 " போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும் "
28 " அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும். "
― Su. Venkatesan , வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி (வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி)
29 " புதிய படகைத் தண்ணீரில் இறக்குவதைப்போல கிராமங்கள் ஒவ்வொன்றாய் பெரியாற்று நீரில் இறங்கின. நீரோடு வாழப்பழகுதல் எளிதன்று. நீர் அவர்களுக்குள் இறங்கிப் பாய்ந்து கசிந்தபடி இருந்தது. நீரின் குணம் படியப்படிய மனிதனுக்குள் விளைச்சல் ஆரம்பித்தது. சம்சாரித்தனத்தின் உயிரே நிலத்தில் பயிர் விளையும்பொழுது மனத்துக்குள்ளும் அது விளைவதுதான்; நிலத்தில் பயிர் வாடும்போது மனதுக்குள் உயிர்வாடுவதுதான். நிலத்தின் கண்ணாடியாக மனித உடல் மாறிவிடுகிறது. நிலம் போர்த்திய பேருடலுடன் அலையும் மனிதர்கள் பயிர்களின் வேர்களை நரம்புகளெனத் தங்களுக்குள் ஊடுருவ விட்டுவிடுகின்றனர். பச்சைப் பயிர் வளர்ந்து, பரிய ஆரம்பித்து, பால்பிடித்து, முத்துமுத்தாக விளைந்து வயலிலே சாய்ந்து படுத்துறங்கும் காலத்திற்குள் விதவிதமான மன உணர்வுகளால் உருமாறியபடியே இருக்கின்றனர். பாய்ச்சிய நீரில் விளையும் பயிர் நிலத்தில் மட்டும் விளைவதில்லை. வேளாண்மை எங்கு நடக்கிறது என்பது ஒரு மர்ம விளையாட்டாகவே இருக்கிறது. இயற்கையின் பேரதிசயங்களுக்குள் கால் நனைத்து சம்சாரி வயல்வெளியெங்கும் நடந்து திரிகிறான். "
― Su. Venkatesan , காவல் கோட்டம்
30 " கதை, சொல்லும்போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான். "
31 " மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குக்கூட நம்மை வெட்கித்து தலைகுனிய செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு. "
32 " தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சி துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும். "
33 " வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒருவிதமான கலைதான். "
34 " படைவீரர்கள் தாம் தோற்றவுடன் வீழ்வார்கள் . குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள் ; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள். "
35 " அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம். "
36 " தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை. "
37 " பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது. "
38 " வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர் "
39 " வீழ்ச்சிக்குப்பின் எவ்வளவு காலம் நிலைத்திருந்தாலும் கோட்டை அதன் அர்த்தத்தை ஓரு சிறு கல்லில் கூட தக்கவைத்துக் கொள்வதில்லை. அது அதனது அர்த்தத்தையும் அவசியத்தையும் ஒருபோதும் தான் தீர்மானிப்பதும் இல்லை. எதிரிகளால் நாற்புறமும் சூழப்பட்ட நிலையில் உட்பகுதியில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் அது உணர்ந்ததுமில்லை. அவர்களின் பசியை அது அறியாது. முற்றுகையைக் கண்டு அது அஞ்சியதில்லை. வீழ்த்தப்பட்ட பின் சிதைந்துபோன நெடுங்கதவுகளின் வழியே வெட்டுண்ட தேகங்களை இழுத்துக்கொண்டு கரிய இரத்தம் வெளியேறும் போது அதைக் கண்டுகொண்டதுமில்லை. ஏதோ ஒரு மலைப்பகுதியில் இருந்து தன்னைச் செதில் செதிலாக வெட்டி எடுத்து வந்து இங்கே அடுக்கி வைத்தவர்களின் மீது அதற்குக் கோபம் இல்லை; ஆதரவு காட்டவும் தெரியாது. அது வெறும் கல் அவ்வளவுதான். மனிதன் தான் அதன் மீது கனவு காண்கிறான். கட்டியெழுப்புகிறான். ஏதேதோ செய்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். செதுக்கி வழிபடுகிறான். நம்பி வரம் பெற விழைகிறான். "
40 " காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறி கலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன? "