" குற்றச் சமுதாயத்தினர் சட்டம், 1871-ல் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்திய மக்கள் குழுக்கள் பலவற்றின்மீது இனப்படுகொலை வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நியாயப்படுத்தப்பட்டது. அந்த இந்திய மக்கள் குழுக்கள் பிறப்பிலேயே ‘குற்றவாளி வம்சத்தினர்’ எனக் கருதப்பட்டனர். ஆனால் இதற்கான அடிப்படைக் காரணமே, அவர்கள் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தைத் தங்கள் பிராந்தியங்களிலும் வனங்களிலும் எதிர்த்தனர் என்பதுதான். ‘தக்ஸ்’ (Thugs) எனப்படும் மக்கள் குழுவினர் சித்திரம் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். இந்த மோசமான சித்திரிப்பின் விளைவாக, தக்ஸ் எனும் வார்த்தை ஆங்கில அகராதியில் ‘குற்றம் செய்பவன்’. ‘பண்பாடில்லாதவன்’ என்கிற பொருளுடன் இன்றைக்கும் நிலை பெற்றுவிட்டது. "
― Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines