Home > Work > செம்மாரி
1 " கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும்உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு!உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும்,இருக்கவேண்டும், நீ விட்ட வடு! "
― Samura - சமுர , செம்மாரி
2 " சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை;கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை;கருப்பு மேகம், வந்தால்தான் வளமை;இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை! "
3 " வெள்ளை மனதுடன் இருப்பதே மேல்,‘இல்லை’ என்ற மனசுக்காரன், இறப்பதே மேல்;வெள்ளைத்தாளிலே, எழுத்தாளரின் கலை எழுத்து தொடங்கும்,வெற்றுத்தாளிலே கையெழுத்திட்டவரின், தலை எழுத்து முடங்கும்! "
4 " இங்கு பெரியோன், சிறியோன் இல்லை,இங்கு கல்லோன், இல்லோனே உண்டு;தெரிந்ததை, பத்து பேருக்கு சொல்லிக்கொடு,இருப்பதை, அற்ற பேருக்கு அள்ளிக்கொடு! "
5 " மோசமான சினத்தை ஆதரித்தால்,அவமானச்சின்னமே, அவதரிக்கும்;கனப்பொழுது, கோபத்தை கட்டுப்படுத்தினால்,தினப்பொழுதும், வாழ்வில் துன்பமில்லை! "
6 " தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என,தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்;முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான்,முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக! "
7 " வேண்டும் என்று, இருக்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட,வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்;நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட,நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து! "
8 " சாதித்தவனை, சாதி பாராமல் பாராட்டு;நிறவேத்தியவனை, நிறம் பாராமல் பாராட்டு;இணக்கமாக இருப்பவனை, இனம் பாராமல் பாராட்டு;சமயத்தில் முடித்தவனை, சமயம் பாராமல் பாராட்டு! "
9 " தாவரத்திற்கும், உயிர் உண்டு,தாவும் இனத்திற்கும், உணர்வு உண்டு;தான் உண்டு, என இருப்பதை,நாம் உண்டு வாழ, அழிக்காதே! "