Home > Work > Moondram Ulaga Por
1 " மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்.""நீ மிருகமா? தெய்வமா?""நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல. "
― Vairamuthu , Moondram Ulaga Por
2 " உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அதுபோல் ஒரு கொடுமை இல்லை. வித்தியாசங்களே அடையாளங்கள்; ஓரே நிறத்தில் இருந்தால் வானவில்லுக்கு ஏது வசீகரம்? வேற்றுமை என்பது உலகியல்; அதில் ஒற்றுமை காண்பது வாழ்வியல். "
3 " தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக் கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுப்பது தோல்வி. "
4 " பூமியை மனிதன்தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ, அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பதும். "
5 " வாழ்வின் பல தருணங்களில் அறியாமைதான் சந்தோஷம்; அறிவு நிம்மதிக்குச சத்துரு. "
6 " அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ காயமோ வெற்றிடமோதான் லட்சியத்திற்கு கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது. "
7 " இந்தியாவில் பிடித்தது?""உழைப்பு.""பிடிக்காதது?""ஊழல்.""ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!" "உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது. "
8 " இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறுவேறன்று. இயற்கையின் சிறுபிரதிதான் மனிதன்; மனிதனின் பெரும்பிரதிதான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை. "
9 " மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்கு மீட்டுக் கொடுத்தால் போதும்; அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது; மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள். "
10 " சொற்களும் அம்புகளும் ஒன்றுதான். சொல்லுக்கும் அம்புக்கும் தனி பலம் ஏதுமில்லை. வீரத்திலும் சத்தியத்திலும் தோய்ந்து வருவதிலிருக்கிறது அம்புக்கும் சொல்லுக்குமான ஆற்றல். "
11 " தேவைக்கு ஆரம்பிக்கிற சம்பாத்தியம், ஆசைக்கு இழுத்துட்டுப் போகுது. ஆசை பேராசையில முடியுது. பேராசை மனவியாதியில கொண்டுபோய் விட்டுறது மனுசன. "
12 " இந்த உலகத்தை பிறப்பிலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் சோகத்தில் முடிகிறான்; மரணத்திலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் ஞானத்தில் முடிகிறான். "
13 " எரியும் மூங்கில் காட்டில் சிறகு கருகும் ஒரு பட்டாம்பூச்சியை எந்தப் பறவை விசாரிக்கும்? "
14 " படிச்ச மகன் பெருமையை படிக்காதவன் கொண்டாடற மாதிரி படிச்சவன் கொண்டாடறதில்ல. "
15 " சுவையான கதை; ஆனால் சோக முடிவு.""எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது; எல்லா சோகமும் ஒரு சுகமாய்க் கனிகிறது. காலனி ஆதிக்கம் உலகச் செல்வத்தை அள்ளிச் சென்றது சோகம்; உலகெங்கும் ஆங்கிலத்தை விட்டுச் சென்றது சுகம். "