Home > Work > வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல்
1 " தன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல் "
― ஜெயமோகன் [Jeyamohan] , வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல்
2 " சற்றே சரிந்த துலாத்தட்டு அளிக்கும் பொறுமையின்மையுடன் அன்றி அவரை பார்க்க முடிவதில்லை. படையாழியும் வேய்குழலும் நிகர்கொள்ளலாகுமா? குழல்சூடிய அப்பீலி ஒரு துலாமுள்.திகைப்புடன் அவர் குழலில் சூடிய பீலியை நோக்கினாள். அதுவும் அவளுக்கு நோக்களிக்கவில்லை. படபடக்கும் உள்ளத்துடன் அவள் அவர் புன்னகையை, ஒற்றைக்கல்லாரம் துவண்ட மார்பை நோக்கினாள். பின்னர் காலடிகளுக்கு நோக்கு தழைந்தாள். அறிந்தவை, அணுக்கமானவை. அவள் உளக்கொந்தளிப்பு அடங்கியது. அவள் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். "