Home > Work > Arthamulla Hindu Matham, Vols. 1-10
1 " என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான். "
― Kannadasan , Arthamulla Hindu Matham, Vols. 1-10
2 " எதிரே வந்த மாலைகளைப் பார்த்துப் பின்னாலே திரும்பிப் பார்த்தேன். அங்கேயும் மாலைகள் வந்து கொண்டிருந்தன. நான் நின்று விடவில்லை. "
3 " விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும். தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும். "
4 " மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் ‘சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது? "
5 " விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது. எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு ‘அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும். எதிர்த்தால் வேரொடு பிடுங்க முயலும். பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை. ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும். பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை. "
6 " வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது. "
7 " குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள். மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள். அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள். தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது. சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது. குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது. "
8 " வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம். மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம். உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம். ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம். "
9 " காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம். ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம். பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம். இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்? மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது. "
10 " குடும்பக் கோபம் தணியும்; தொழிலின் கவலை தணியும்; கடன் கவலை தணியும்; ஆனால், பகை உணர்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது. ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால், அது திடீர் திடீர் என்று தோன்றும். "
11 " எது நடக்கக்கூடாது’ என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக, அது நடந்தே விடுகிறது. "
12 " இத்தோடு போதும்’ என்று எதையும் விடமுடிவதில்லை. நினைவுகள் பின்னிப் பின்னி இழுக்கின்றன. மனித வீணையில் விநாடிக்கு விநாடி சுதிபேதம். ஆயிரக்கணக்கான சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஆண்டவனிடத்தில் ஐக்கியமாவதற்கு இந்துமதம் வழி காட்டுகிறது. "
13 " அறிவால் உணர்ந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டிவிடும். "
14 " வாழ்ந்துக்கொண்டே சாவது லௌகீகமாகி விட்டால், செத்தவன் போல் வாழ்வதுதான் ஞானமாகி விடுகிறது. "
15 " ஒரு கட்டம் வரையில் இனிப்பை ருசி பார்த்த பிறகு அதுவே கசப்பாகி விடுகிறது. கசப்பை உணரத் தொடங்கும்போது, வாழ்க்கை வெறுப்பாகி விடுகிறது. வெறுப்பே வளர்ந்து வளர்ந்து, இதயம் நெருப்பாகி விடுகிறது. இந்த வளர்ச்சிக்கு ஆசைதான் காரணமாகி விடுகிறது. "
16 " ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம் "
17 " ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று வருகிறது. ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது. அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது. "
18 " காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும். "
19 " நமது தேவைகளே நமக்குரிய துறக்கத்தினை உண்டு பண்ணுகின்றன. அச்சுவர்க்கமும் நமது தேவைகளின் மாறுதல்களுடன் மாறுபாட்டடைகின்றது "
20 " ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். "