" மேத்தா கோபால கிருஷ்ண கோகலேவுக்கு ஒரு வியக்கத்தக்க கடிதத்தை எழுதினார். அது இப்படி ஆரம்பிக்கிறது: அன்புள்ள ஐயா, நான் சென்றமுறை ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தபோது திரு காந்தியை அதிகம் கண்டேன். ஆண்டுக்கு ஆண்டு (எனக்கு அவரை இருபது ஆண்டுகளாகத் தெரியும்) இன்னும் அதிகமாக அவர் தன்னலமற்றவராகிறார். இப்போது அவர் ஏறக்குறைய ஒரு துறவு வாழ்வு வாழ்ந்துவருகிறார்-நாம் வழக்கமாகப் பார்க்கும் சாதாரணமான துறவி அல்ல; மாறாக ஒரு மகாத்மா. தன் தாய்நாடுதான் அவரது மனதை ஆக்கிரமித்திருக்கும் ஒரே சிந்தனை. தன் நாட்டுக்காக உழைக்க விரும்பும் அனைவரும் காந்தியையும் அவரது சமீபத்திய நிறுவனங்களான ஃபீனிக்ஸ் குடியிருப்பு, ஃபீனிக்ஸ் பள்ளி ஆகியவற்றையும் குறித்துக் கற்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. டிரான்ஸ்வாலில் அவரது வழிகாட்டலின்கீழ் நடத்தப்பட்ட சாத்விகமான எதிர்ப்பைப் பற்றியும் நேரில் சென்றால் நன்றாக அறிந்துகொள்ள முடியும். திரு போலாக் இப்போது இங்கே எங்களுடன் தங்கியிருக்கிறார்; ‘இந்தியாவின் சேவகர்கள்’ பிரமாதமான வேலை செய்வதாக என்னிடம் சொல்கிறார். எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இந்தியாவுக்காகப் பணியாற்றும் எந்த ஒரு ஊழியரின் கல்வியும் திரு காந்தியையும் அவரது நிறுவனங்களையும் பற்றிக் கற்காகதவரை முழுமையடைய முடியாது. கோகலேயின் "
― Ramachandra Guha , Gandhi Before India