Home > Author > Subramaniya Bharathiyar >

" நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? "

Subramaniya Bharathiyar , Selected Poems : Subramania Bharati


Image for Quotes

Subramaniya Bharathiyar quote : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே<br />நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே<br />நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்<br />சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?<br />சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?<br />கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்<br />அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?<br />அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?<br /><br />வானகமே இளவெயிலே மரச்செறிவே<br />வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்<br />கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?<br />வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்<br />கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?<br />போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்<br />நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?<br /><br />நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே<br />நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்<br />சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?<br />சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?<br /><br />காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்<br />கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?<br />காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்<br />கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?<br />காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?<br />நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?<br /><br />நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே<br />நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்<br />சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?<br />சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?<br />கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்<br />அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?<br />அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?