Home > Author > S.M. Paranjothi Pandian
1 " சொத்து விஷயங்களில் ஏமாந்தவர்கள், ஏமாற்றியவர்கள் என்று யாரும் இல்லை!! விவரம் தெரிந்தவர்கள் விவரம் தெரியாதவர்கள் என்று தான் இருக்கிறார்கள். "
― S.M. Paranjothi Pandian
2 " சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள் / உணர்ச்சிகள் இல்லா மரக்கட்டையாய் மாறிவிடுங்கள். "
3 " ரியல் எஸ்டேட் முதலீடும், உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களும், தற்போதைய வாழ்கை பயணமும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பல பேர் இந்த மூன்றும் நேர்கோட்டில் இல்லாதனாலேயே தோற்கின்ற முதலீட்டாளர்கள் ஆகின்றார்கள். "
4 " நிலத்தின் மீதான வரையறுக்கப்பட்ட உரிமையே முழுமையான உரிமை என்று மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். "
5 " நிலத்தின் ஆவணங்களை தெரிந்து கொள்வது என்பது நாட்டின் உண்மை வரலாற்றை புரிந்து கொள்வதற்கு சமம். "
6 " சொத்துக்களை பற்றி கற்றுக் கொள்ளுதல் இருந்தால் தான் சொத்துக்களை பெற்றுக்கொள்ளுதல் இருக்கும். "
7 " நிலம் சம்மந்தப்பட்ட நிலவரங்கள் பல ஓட்டைகளுடன் இருக்கிறது. அதனை திருத்த முயலாதீர்கள் அதில் விழாமல் வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள். "