Home > Author > Subramaniya Bharathiyar >

" ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா! "

Subramaniya Bharathiyar , பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]


Image for Quotes

Subramaniya Bharathiyar quote : ஓடி விளையாடு பாப்பா!-நீ<br />ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!<br />கூடி விளையாடு பாப்பா!-ஒரு<br />குழந்தையை வையாதே பாப்பா!<br /><br />சின்னஞ் சிறுகுருவி போலே-நீ<br />திரிந்து பறந்துவா பாப்பா!<br />வன்னப் பறவைகளைக் கண்டு-நீ<br />மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!<br /><br />கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்<br />கூட்டி விளையாடு பாப்பா!<br />எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு<br />இரக்கப் படவேணும் பாப்பா!<br /><br />பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்<br />பசுமிக நல்லதடி பாப்பா!<br />வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது<br />மனிதர்க்கு தோழனடி பாப்பா!<br /><br />வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு<br />வயலில் உழுதுவரும் மாடு,<br />அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை<br />ஆதரிக்க வேணுமடி பாப்பா!<br /><br />காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு<br />கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு<br />மாலை முழுதும் விளையாட்டு-என்று<br />வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!<br /><br />பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்<br />புறஞ்சொல்ல லாகாது பாப்பா!<br />தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன<br />தீங்குவர மாட்டாது பாப்பா!<br /><br />பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்<br />பயங்கொள்ள லாகாது பாப்பா!<br />மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்<br />முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!<br /><br />துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்<br />சோர்ந்துவிட லாகாது பாப்பா!<br />அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்<br />அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!<br /><br />சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்<br />சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!<br />தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ<br />திடங்கொண்டு போராடு பாப்பா!<br /><br />தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்<br />தாயென்று கும்பிடடி பாப்பா!<br />அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்<br />ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!<br /><br />சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத் <br />தொழுது படித்திடடி பாப்பா!<br />செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்<br />தினமும் புகழ்ந்திடடி பாப்பா!<br /><br />வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்<br />வாழும் குமரிமுனை பாப்பா!<br />கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்<br />கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!<br /><br />வேத முடையதிந்த நாடு,-நல்ல<br />வீரர் பிறந்ததிந்த நாடு;<br />சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்<br />தெய்வமென்று கும்பிடடி பாப்பா!<br /><br />சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்<br />தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;<br />நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு<br />நிறை உடையவர்கள் மேலோர்.<br /><br />உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்<br />உண்மையென்று தானறிதல் வேணும்;<br />வயிர முடையநெஞ்சு வேணும்;-இது<br />வாழும் முறைமையடி பாப்பா!