" இலக்கியத்தை அல்லது கலைகளை வெறும் கேளிக்கையாகப் பார்ப்பவர்கள் அதை லௌகீக வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாக நினைக்கிறார்கள். அது அவர்களை அலைக்கழிப்பதில்லை. இயல்பான ஒரு இளைப்பாறலாகவே நின்றுவிடுகிறது
ஆனால் அதை ஞானமாக, முழுமைநோக்குக்கான வழியாக அணுகுகிறவர்கள் பலத்த அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். சமநிலைக் குலைவு நிகழ்கிறது.அவர்கள் தங்கள் லௌகீகமான கடமைகளில் பிழைகள் செய்கிறார்கள். "