" வாக்கொடு மனமிறந்த மன்னவனெங்கு மாகி நீக்கற நிறைந்தானேனு நிகழ்தரா ததனான் முத்தி போக்கெளிதல்ல வென்றப் புனிதனே புந்தி செய்தேம் பாக்கிய வகையா வெண்ணில் பதிமிகு பாரில் வைத்தான் -எனும் அந்தப் பாடலின் பொருள், உருவ வழிபாட்டுக்கே இலக்கணம் சொல்கிறது. சிவபெருமான் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. விறகுக்குள்ளே தீயாக, பசுவின் பாலுக்குள் நெய்யாக, எள்ளுக்குள் எண்ணெயாக இருப்பது எல்லாமும் அவன்தான். ஆனால், இந்த உண்மையை ஞானத்தாலேயே உணர முடியும். மாயை மிகுந்த உலகில், அறிவதாகிய அறிவே முன் தோன்றி செயலாற்றும். அதனால், அறிவதற்கே இங்கே முதலிடம். உணர்வது என்பது இரண்டாம் பட்சமே! "
― Indra Soundar Rajan , சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]